Thursday, September 10, 2015

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Part -12

*  கத்திரிக்காயை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்தால் கத்தரிக்காய் நன்றாக குழையும்.

* கோஸ் பொரியல் செய்யும்போது சிறிதளவு பால் சேர்த்தால் கெட்ட வாடை வராது. பொரியலும் ருசியாக இருக்கும்.

* பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிசறி வைத்து சிறிது புளித் தண்ணீர் தெளித்து கலந்து வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்து வதக்கினால் கசப்பே இருக்காது.

* தாளிக்கும் எண்ணெய்யிலேயே சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய்கறிகளைப் போட்டு வதக்கினால் அவை நல்ல நிறத்துடன் இருக்கும்

* புளித்த தோசை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்த பணியாரம் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
பிரிட்ஜில் வாழைப்பழத்தையும் உருளைக்கிழங்கையும் வைக்கக்கூடாது.

* குழம்போ, பொரியலோ அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லியை போடக்கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும்போது, குலாம்ஜாமூன் பொரிக்க எண்ணெய் நன்றாக காயக்குடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்ககூடாது.

* ரசம் அதிகமாக கொதிக்கக் கூடாது..

* வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்கவேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஊற வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.


No comments:

Post a Comment