Wednesday, March 30, 2016

ராகு காலம் எம கண்ட காலம்

ராகு காலம் எம கண்ட காலம் என்பது என்ன ?இவைகளின் பயன் என்ன ?
இன்று சோதிட நம்பிக்கை உள்ளவர்கள் அல்லாது எல்லோராலும் பேசப்படும் ஒரு வார்த்தை ராகு காலம் இல்லாத நேரத்தில் ஒரு காரியத்தை துவங்கலாம் என்ற எண்ணம் .
இவைகளை பற்றி தான் இந்த பதிவு ..
முதலில் நாம் சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் .
சோதிட நூல்களில் சில குறிப்புகளை சொல்கிறது
பூமி ,சூரியன் ,சந்திரன் இவர்களின் சுழற்சி தொடர்பு தான் வருடம்,
திங்கள் ,திதி,கிழமை ,யோகம்
கர்ணம் , ,நாழிகை என்ற கணக்குகள் சொல்லி இவைகளை வைத்து
சில குறிப்புகளை நமக்கு தந்து உள்ளது என்று நாம் அறிந்ததே .
இதை போல 7 கோள்கள் தான் முதலில் 12 வீடுகளில் பிரித்து அமைக்கப்பட்டது (இது சோதிடம் பயில்பவர்களுக்கு புலப்படும் )
சிவ பெருமானின் ஆசியால் ராகுவும் ,கணபதியின் ஆசியால் கேதுவும்
இவர்களுடன் சுழற்சி முறையில் எந்த வீட்டிலும் அமரலாம் தனதாக்கி கொள்ளலாம் என்று கொடுக்க பட்டது .
இப்படி இவர்களுக்கு வகுத்து கொடுக்க பட்டது 3+3 நட்சத்திரம் ,
அதாவது கேதுவுக்கு 3,ராகுவுக்கு 3,
இதை போல ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது நாம் வழக்கில் பயன்படுத்தும் சொல் ,
ஆனால் சோதிட நூல்கள் சொல்வது
60 விநாழிகை--1 நாழிகை
2.5 நாழிகை -- 1 மணிநேரம்
12 நாழிகை -- 1 பகல்/1 இரவு
24 நாழிகை -- 1 நாள்
இதில் சூரிய உதயமாகும் கிழமை நாளில் துவங்கும் முதல் 1.25 நாழிகையை ஆண் காலம் என்றும் அடுத்த 1.25 நாழிகையை பெண் காலம்
என்றும் வகுத்து காலத்தின் அடித்தளமாக வைத்து உள்ளார்கள் .
எளிமையாக ...
ஞாயறுயன்று காலை 6 மணி முதல் 6.30 மணிவரை ஆண்காலம் பிறகு
6.30 --7.00 மணிவரை பெண்காலம்.
ரிஷிகள் ,சித்தர்கள் , அல்லது ஒரு மந்திரவாதி ஆண்காலத்தில் தான் மந்திர பிரதிஷ்டை ,அல்லது வகுப்புகள் துவங்குவார்கள் .
ஆண்காலத்தில் துவங்கும் மந்திரம் உச்சரிப்பு சித்தியாகும் என்பது இவர்கள் தந்த நூல்கள் சொல்கிறது .
சோதிடர்களிடம் ஒரு குழந்தை பிறந்து உள்ளது என்று குறிப்பு சொன்னால்
அவர் உடனே ஆண்காலத்தில் பிறந்த சிசு /பெண்காலத்தில் பிறந்த சிசு
என்று கவனித்து பிரித்து கணித்து விடுவார் ,இன்று இதை பற்றி யாரும் அறிந்து இருக்க வில்லை .
என் வாழ்வில் நடந்த சம்பவம் ,
ஆண் குழந்தை பிறந்த நேரம் சரியாக 10 .43காலை -என்று மருத்துவர்
எங்களிடம் சொன்ன பொழுது செவ்வாய் கிழமை அன்று 10.30 மணிவரை தான்
ஆண் ஜெனனம் பூமியில் அதன் பின் பெண் ஜெனன காலம், எனக்கு
தெரிந்தது ,
அவர்களிடம் நான் ஒன்றும் சொல்லவில்லை நான் குறிப்பு வைத்து கொண்டேன் ,
இப்படி காலம் தவறாக கணிக்க பட்ட ஜாதகம்கள் தான் இன்று எழுத படுகிறது .
இதை போல ராகு கிரகதேவர் ஒரு நாளைக்கு 3.75 நாழிகை தன்னுடைய காலமாக பிரித்து கொண்டார் .(1.5 மணிநேரம் )
இவருடைய காலம் எந்த கணக்கோ அதே எதிர் திசையில் கேதுவின் காலமாக நடத்தபடுகிறது .
ராகுவின் புத்திரன் --அர்த்தப்ர கரணன்
கேதுவிற்கு --குழந்தை இல்லை(ஞான காரகன் )
சனி புத்திரன் --குளிகன் /மாந்தி
ராகுவின் காலம் --ராகு காலம்
கேதுவின் காலம் --எம கண்டம்
ராகு /கேது காலத்தில் எது செய்தாலும் தீமையாக அல்லது தடையாக/தாமதமாக
முடியும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது ,
காரணம் இவர்கள் இருவரும் 7 கோள்களின் எதிர் திசையில் பூமியை சுற்றி வருகிறார்கள் என்றும் இவர்களின் ஒளி
கதிர்கள் பூமிக்கு சுப பலனை தராது என்று சொல்ல படுகிறது .
பொதுவாக சுப காரியம்கள் தவிர்க்கப்படவேண்டும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது .
ராகு காலத்தில் அம்மனை வழிபாடு செய்வது சிறப்பு என்ற சொல்ல காரணம்
ராகு வாலை சாபத்தின் அடையலாம்(பெண் )
ராகு பரம்பரை
ராகு அதிர்ஷ்டம் தரும் கிரகம் திருப்பம் தரும் கிரகம்
ராகு துடிப்பான செயலை உடையது
இந்த ராகுவின் ஆசிகள் அம்பாளிடம் மட்டும் நன்றாக செயல்படும் என்பதாலும் 7 முட்டைகளில் 7 பாம்பு சகோதரிகளாக ராகுவின் காரகத்துடன் அம்பாள்
ஜெனனம் கொண்டதால் ராகு காலம் அம்பாளுக்கு சிறப்பாக மாறியது .
இப்படி காலத்தில் தனக்கு ஒரு பங்கை எடுத்த ராகு
ஒவ்வொரு கிழமைகளில் ராகு காலத்தில் தெய்வம்களை வழிபட/
தேவதைகளை வழிபட காரியம் சித்தியாகும் என்று நூல்கள் சொல்கிறது .
திங்கள் ராகு காலத்தில் --சிவனுடன் உள்ள அம்பாளை வழிபாடு செய்ய தடை இல்லாத புகழ் கிடைக்கும்
செவ்வாய் ராகு காலத்தில்--முருகனை வழிபாடு செய்ய ரத்தத்தில் /வயிற்றில் உள்ள நோய்கள விலகும்
புதன் ராகு காலத்தில்--பெருமாளை வழிபாடு செய்ய தொழில்/உத்தியோகத்தில் மேன்மை ஏற்பட்டு தடைகள் விலகும்
வியாழன் ராகு காலத்தில் --விநாயகரை வழிபாடு செய்ய உணவு தானம் செய்ய மதிப்பு மரியாதை சமுதாயத்தில் கிடைக்கும் .
வெள்ளி ராகு காலத்தில்-- தனித்த துர்க்கை /காளி/பெண் தேவதைகள் வழிபாடு செய்ய பெண் சாபம், வாலை சாபம், ராகுவின் சாபம், மற்றும் தரித்தரம் விலகும் .
சனி ராகு காலத்தில்--சிவபெருமானை /பெருமாளை வழிபாடு செய்ய நட்பினால் வந்த துரோகம் ,கீழ்மட்ட
சமூகத்தினர்களினால் உண்டான சாபம் ,வம்ச சாபம் விலகும்
ஞாயறு ராகு காலத்தில்--சிவனையும் ,பெருமாளையும் வழிபாடு செய்ய
அரோக்கியம் ,ஆயுள் ,அரசாங்கத்தின் அதரவு மற்றும் குலதெய்வ ஆசிகள் கிடைக்கும்
(இதை சகல தோஷ நிவர்த்தி என்பார்கள் )
இதை போல ஒவ்வொரு கிழமைகளில்
எமகண்ட நேரத்தில் பைரவரை வழிபாடு செய்ய பைரவரின் ஆசிகள் கிடைக்கும் ...
எமகண்ட நேரத்தில் பெற்ற கடன் தொகைகளை திருப்பி தர கடன்தொகைகள் விரைவாக முடிக்க படும் .
நன்றி

No comments:

Post a Comment