Thursday, May 10, 2012

கபீர் தாஸ்

ஒரு சிலர் குரு உபதேசம் பெரும் விதம் மிகவும் விசித்திரமாக இருக்கும். சுகப்பிரம்ம மகரிஷி, பூவுலகில் பக்தியை பரப்ப கபீர் தாசராக அவதரித்திருந்தார். அப்போது, குரு உபதேசம் பெறவேண்டி, குருவை தேடி அலைந்தார். ஆனால், பிறப்பில் இஸ்லாமியரான இவரை எவரும் இவரை சீடனாக ஏற்றுக்கொண்டு மந்திரோபதேசம் செய்ய விரும்பவில்லை. அப்போது காசியில் இருந்த ராமானந்தரிடம் சென்று தமக்கு மந்திரோபதேசம் செய்துவைக்கும்படி கேட்க, அவரோ இவரை திட்டி அனுப்பிவிட்டார். இருப்பினும் கபீர் மணம் தளரவில்லை. கடைசீயில் ஒரு உபாயம் கண்டார். பெரியவர்கள் தங்களை அறியாமல் ஏதாவது தவறு செய்திவிட்டால் உடனே இறைவன் நாமாவை கூறுவார்கள். எனவே அதையே நாம் மந்திரோபதேசமாக கொள்ளலாம் என்று கருதி, ராமானந்தர் காசியில் நீராட வரும் வழியில் முன்தினம் இரவே சென்று நதி தீரத்தில் படித்துறையில் உள்ள படியில் ஒடுங்கி படுத்துக்கொண்டார். அதே போல, அதிகாலையில், நீராட வந்த ராமானந்தர் தெரியாமல் இவரை மிதித்துவிட, 'ராம்... ராம்' என்றார். அதையே தமக்கு உபதேசமாக ஏற்றுக்கொண்ட கபீர் அதற்க்கு பிறகு, பரம சந்நியாசி ஆகி, பக்தியை பரப்பி சாட் சாத் அந்த ராமனையே தர்சித்தாராம். திருமால் அடியார்களின் வரலாற்றை கொண்டாடும் 'மகா பக்த விஜயம்' நூலில் இவரது வரலாறு தனிசிரப்புடன் போற்றப்படுகிறது. 

எனவே, ஆன்மீகத்தில் கரை காணவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு முதலில் DETERMINATION இருக்கவேண்டும். பின்னர் அனைத்து சுலபத்தில் சாத்தியமாகும்.

No comments:

Post a Comment