Thursday, December 29, 2011

ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?


ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை? 
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்); 
2. எழுத்தாற்றல் (லிபிதம்); 
3. கணிதம்; 
4. மறைநூல் (வேதம்); 
5. தொன்மம் (புராணம்); 
6. இலக்கணம் (வியாகரணம்); 
7. நயனூல் (நீதி சாத்திரம்); 
8. கணியம் (சோதிட சாத்திரம்); 
9. அறநூல் (தரும சாத்திரம்); 
10. ஓகநூல் (யோக சாத்திரம்); 
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்); 
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்); 
16. மறவனப்பு (இதிகாசம்); 
17. வனப்பு; 
18. அணிநூல் (அலங்காரம்); 
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்; 
21. நடம்; 
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்); 
23. யாழ் (வீணை); 
24. குழல்; 
25. மதங்கம் (மிருதங்கம்); 
26. தாளம்; 
27. விற்பயிற்சி (அத்திரவித்தை); 
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை); 
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை); 
30. யானையேற்றம் (கச பரீட்சை); 
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை); 
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை); 
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை); 
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்); 
35. மல்லம் (மல்ல யுத்தம்); 
36. கவர்ச்சி (ஆகருடணம்); 
37. ஓட்டுகை (உச்சாடணம்); 
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்); 
39. காமநூல் (மதன சாத்திரம்); 
40. மயக்குநூல் (மோகனம்); 
41. வசியம் (வசீகரணம்); 
42. இதளியம் (ரசவாதம்); 
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்); 
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்); 
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்); 
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்); 
47. கலுழம் (காருடம்); 
48. இழப்பறிகை (நட்டம்); 
49. மறைத்ததையறிதல் (முஷ்டி); 
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); 
51. வான்செலவு (ஆகாய கமனம்); 
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்); 
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்); 
54. மாயச்செய்கை (இந்திரசாலம்); 
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்); 
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்); 
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்); 
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்); 
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்); 
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்); 
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்); 
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்); 
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்); 
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்

No comments:

Post a Comment