Thursday, December 29, 2011

கேள்வி கேட்டலே ஞானத்தின் ஆரம்பம்.

கேள்வி கேட்டலே ஞானத்தின் ஆரம்பம். குழந்தைப் பருவத்தில் எதையும் துருவித் துருவி ஆராய்ந்து நமக்குள்ளேயே கேள்வி கேட்கும் நாம் பெரியவர்களாக வளர்ந்ததும் இந்தத் துருவி ஆராயும் பழக்கம் மறைந்து விடுகிறது. இதானல் நமது அறிவும் சிறிது சிறிதாக மங்கி, மறைந்து விடுகிறது. குழந்தைப் பருவத்தில் மழலைக் குழந்தைகளைச் சுற்றி வரும் தேவதைகளும் தெய்வங்களும் குழந்தை மூன்று வயதை அடைந்தவுடன் அவர்களை விட்டு விலகி விடுகின்றன. அதனால் குழந்தைகள் தெய்வீகத் தன்மையை இழந்து, கேள்வி கேட்டு அறிவை விருத்தி செய்யும் பண்பையும் இழந்து விடுகின்றன. கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற மகான்கள் வாக்கிற்கு ஏற்ப பெரியோர்கள் நாம் கேட்டால்தான் எதையும் கொடுக்கத் தயாராக உள்ளார்கள்.

No comments:

Post a Comment